இனியொரு விதி செய்வோம் !!!

Monday, August 23, 2010





Email : indianyoutharmy@gmail.com




அனைவருக்கும் வணக்கம்...
வாய்மையே வெல்லும் என்பதை நம் இந்தியாவின் தேசிய வாசகமாய் கொண்டிருந்தாலும் வாய்மைக்கு இன்று எங்கே மதிப்பு இருக்கிறது சொல்லுங்கள். கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய நேரத்தில் கேட்காததால் இன்றைய இந்தியா அரசியல்வாதிகள் எனும் வஞ்சகர்களிடம் சிக்கி தவிக்கிறது. பணம் படைத்தவனே இன்று நம் இந்தியாவை ஆட்சி செய்யும் நிலை உருவாகிவிட்டது. சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு எவரும் அரசியலுக்கு வருவதில்லை.

மாயா இந்தியா - நம் இயக்கத்தின் நோக்கம் முழுவதும் நம் இந்தியாவை இந்தியர்களுக்கே திரும்ப பெற்றுத் தருவது. இன்றைய இந்தியா அரசியல்வாதிகள், ஊழல் மற்றும் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள், முற்போக்கு சிந்தனையில்லாத சமூகத்தினர் கைகளில் அகப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நமது இந்த அறப்போராட்டம் என்றென்றும் தொடரட்டும். நாம் மாணவர்கள். மாணவர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். நம் இந்தியாவை மட்டுமல்ல, இவ்வுலகையே மாற்றிக்காட்டலாம்.

பல தொண்டு இயக்கங்கள் இங்கே இருந்தாலும், நமது முழு நோக்கமும் இந்திய அரசியலையும், மற்ற சமூக அவலங்களையும் உடைத்தெரிவதே. ஆட்சியை மற்றவர்களின் கைகளில் கொடுத்துவிட்டு எனக்கென்ன என்று உட்கார்ந்து கிடப்பது வீண். நம் மக்களையும் நம் நாட்டினையும் நாம் வழிநடத்தி செல்வோம். அதற்கு முதல் படியாக நாம் அனைவரும் ஒன்றினைவோம்.

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி.எந்த நாட்டில் இருந்தாலும் சரி,எந்த ஊரில் இருந்தாலும் சரி. நீங்கள் அங்கு இருந்தபடியே உங்கள் சேவையை நம் நாட்டிற்கு அர்ப்பணிக்கலாம், உங்கள் தொண்டை நம் இயக்கத்திற்கு செய்யலாம். உங்களின் நாட்டிற்காக சேவை செய்யும் நல்ல உள்ளம் மட்டுமே இப்போது நமக்கு தேவை.

இந்த இயக்கம் எந்த அரசியல் கட்சியினை சாடுவதற்காகவோ எந்த ஒரு அரசியல் கட்சியின் பிண்ணனியிலோ தொடங்கப்படவில்லை. சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. எத்தனையோ பிரதமர்கள் வந்து சென்று விட்டார்கள்.எத்தனையோ முதல்வர்கள் பல மாநிலங்களை ஆட்சி செய்தார்கள். எத்தனையோ அரசியல் கட்சிகள் இன்னமும் நம் இந்தியாவில் இருக்கின்றது. ஆனால் இன்னமும் நம் மக்கள் உண்மையான சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்களா.

நம் இந்தியா ஒரு விவசாய நாடு. அது நம்மில் யாருக்காவது நினைவிருக்கிறதா. எந்த ஒரு குழந்தையை கேட்டாலும் பிற்காலத்தில் மருத்துவர் ஆகனும் அல்லது பொறியாளர் ஆகனும் என்றே சொல்கிறார்கள். எந்த ஒரு குழந்தையாவது நான் வளர்ந்து நம் நாட்டு மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயி ஆவேன் என்று சொல்கிறதா.

“ என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில். ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில். உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் ”

உற்பத்தி இருந்தால்தானே நாட்டின் ஏற்றுமதி பெருகி இறக்குமதி குறையும். படித்து முடித்த கையோடு ஒரு சிலர் கணிணி முன்பு அமர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். இன்னும் சிலர் வெளிநாட்டில் படிக்க சென்று அங்கேயே வேலை செய்து அங்கேயே குடியுரிமையும் வாங்கி அங்கேயே தங்கிவிடுகின்றனர். இன்னும் சிலர் இங்கே நம் நாட்டில் கிடைக்கும் ஏதோ குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு வேலையை பார்க்கின்றனர். மீதம் இருக்கும் பெரும்பாலான இளைய சமூகம் வீணாகவே இருந்து பொழுதை கழிக்கின்றனர்.

இன்னும் இதுபோன்ற பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் இங்கே. அவர்களை சரிவர கையாள தெரியவில்லை இன்றைய அரசுக்கு. இருக்கும் விவசாய நிலங்களை தங்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான கருப்பு பணத்திற்காக வெளிநாட்டு பணக்கார முதலீட்டார்களுக்கு விற்று விடுகின்றனர். கேட்க எவரும் இல்லை என்கிற தைரியம் தான் இவர்களை இப்படி செய்ய தூண்டுகிறது. ஆட்சியே நம்மிடம் இருக்கிறது. நம்மை யார் கேட்பார்கள் என்கிற தெனாவட்டு தான் இவர்களை இப்படி நடக்க செய்கிறது. இந்த தைரியமே இவர்கள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் காரணம்.

நம் நாட்டில் குவிந்து கிடக்கும் நில வளங்களையும் கனிம வளங்களையும் மனித வளங்களையும் சரிவர கையாள தெரியாமலும் தங்கள் சுயநலத்திற்காக அவைகளை உபயோகப்படுத்திக்கொண்டும் இன்றைய அரசியல் கட்சிகளும் இன்றைய அரசும் நடத்தி வரும் நாடகங்களுக்கு இன்றே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா.

இன்று ( 22-08-2010 ) ஒரு செய்தி கேட்டேன். பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு 1ரூபாய் உயர்த்தப்படும் என்று. அதோடு இன்னொரு செய்தியையும் கேட்டேன். M.P.-க்களின் சம்பளம் 10000 ரூபாய் உயர்த்தப்படும் என்று. ஏற்கெனவே அவர்களுக்கு அரசு ஒதுக்கும் நிதி வருடத்திற்கு பல கோடிகளை தாண்டும் பட்சத்தில், மாதம் 10000 ரூபாய் என்றால், வருடத்திற்கு ஒருவருக்கு தோராயனமாக ஒரு இலட்சம் என்றே வைத்துக் கொள்வோம். மொத்தம் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவையும் சேர்த்து 765 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மாதம் 10000 ரூபாயை உயர்த்தினால் வருடத்திற்கு கிட்டதட்ட 9கோடி ரூபாய் அதிகம் செலவாகிறது. இவர்கள், அரசு அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கு ஒதுக்கும் நிதியை தங்களுக்கென ஒதுக்குவது பத்தாது என்று இவர்கள் சம்பளத்தை மேலும் ஒதுக்கியிருக்கிறது அரசு. அட வேறு ஒன்றும் இல்லை. கரும்பு தின்ன கூலி கொடுக்கிறது நம் அரசு. 

மூச்சுக்கு முன்னூறு முறை அரசு அரசு என்று சொல்கிறேனே அட அந்த அரசு மட்டும் நியாயமாக நடந்துக்கொள்கிறதா என்ன. நம் நாட்டின் பெருமையினை உலகறிய செய்யும் காமன்வெல்த் போட்டிகளில் ஊழலை செய்திருக்கிறது. இந்த விஷயம் வெளியே தெரியவந்ததும் சம்பந்தபட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அறிக்கை விடுகிறது அரசு. என்னவோ அவர்களுக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி.

சட்டம் தெரிந்தவர்கள் அனைவரும் சொத்து குவிப்பு மற்றும் கொலை வழக்குகளில் இருந்து அரசியல்வாதிகளையும் முன்னால் மந்திரிகளையும் காப்பாற்றுவதிலேயே அதிகம் ஆர்வம் செலுத்துகின்றனர். சட்டத்தை உங்கள் கைகளில் தந்ததற்கு இதுதானா நீங்கள் ஆற்றும் தொண்டு.

சட்டத்தை கையில் எடுத்தால் குற்றம் என்கிறார்கள். சட்டத்தை கையில் வைத்துள்ளவர்கள் குற்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர்.

சரி. அந்த சட்டம் நம் கையில் இருந்தால் நம்மால் முடிந்த சேவைகளை நம் நாட்டிற்கு செய்ய முடியுமல்லவா. இவன் என்ன புதுசா செஞ்சுட போறான். இவனும் மத்தவங்களைப் போலத்தான் இருப்பான் என்று பேசும் பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கு நாமும் நம் இயக்கமும் சொல்லிக்கொள்வது இதுதான்.
உங்களிடம் எங்கள் இந்தியாவை கொடுத்துவிட்டு நாங்கள் பொறுத்திருந்து பார்த்தோம் அல்லவா. இனி உங்கள் காலம் முடிந்துவிட்டது. இனி எங்கள் இந்தியாவை எங்கள் கைகளில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. இளைஞர்களின் சக்தி திக்கெட்டும் சென்று இந்தியாவை வல்லரசாக்கும்.

பல ஆண்டுகளாக நாம் வளர்ந்துவரும் நாடு என்று நம் அரசியல்வாதிகள் காட்டிய மாய இந்தியாவை நம் கையில் எடுத்து பல மாயைகள் செய்து காட்டுவோம்.

இதை படிக்கையில் உங்களுக்கும் நம் நாட்டிற்கு தொண்டாற்ற வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறதா. உங்களைப்போன்ற நல்ல உள்ளம் தான் நம் நாட்டிற்கு தேவை.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி. எந்த வயதினராக இருந்தாலும் சரி. நம் இந்தியாவை நல்வழிப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி.

உங்கள் பெயர்,

உங்கள் புகைப்படம்,

முகவரி,

தொலைப்பேசி எண்/கைப்பேசி எண்

வயது,

மாணவராக இருந்தால் பள்ளி/கல்லூரியின் பெயர், முகவரி

தொழில் செய்பவராக இருந்தால் அதன் விவரம்,

உங்கள் Blood Group,

உங்களை உங்கள் ஊர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினால்
நீங்கள் கொண்டுவர விரும்பும் மாற்றங்கள்,

உங்களிடம் 5 கோடி ரூபாயை தந்தால் நீங்கள் அதை எப்படி செலவு செய்வீர்கள்,

இன்றைய இந்தியாவின் பிரச்சனைகளாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்,

அதற்கு உங்கள் தீர்வு என்ன,

மற்றும் நீங்கள் நம் இயக்கத்தினரிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

நம் இயக்கத்தின் மின்னஞ்சல் :  indianyoutharmy@gmail.com


உங்களுக்கு நம் இயக்கத்தின் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்போம்.

இது முதல் கட்டம் தான். பல ஊர்களில் இருந்து பலதரப்பட்ட இளைஞர்கள் ஒன்றினைந்த பிறகு நம் இயக்கத்தினை பெரிதாய் துவங்குவோம்...

இனியொரு விதி செய்வோம் !!!

வெற்றி நம்மைப்போன்ற இளைஞர்கள் கைகளில் !!!

வாழ்க பாரதம் !!! வெல்க பாரதம் !!!



ஜெய்ஹிந்த் !!!




அன்புடன் -
                             தினேஷ்மாயா
தொடர்புக்கு : +919791155982
மின்னஞ்சல் : dhineshmaya@gmail.com





மேலும் தொடர்புக்கு :
M.Pushpalatha
Email : pushpalatha.uma@gmail.com
Phone : +917299137151

0 Comments: