இதயம் வலிக்குதடி...

Monday, August 23, 2010



இதயம் வலிக்குதடி
பெண்ணே..
என்னடி செய்தாய் நீ..
என்னதான் செய்தேன் நான்..
என்ன வேண்டும் உனக்கு.. – உன்
எண்ணம் வேண்டும் எனக்கு..
எங்கு போவேன் நான்.. – உனை நீங்கி
எப்படி போவேன் நான்..
மறுப்பது உன் குணமா.. எனை
வெறுப்பதும் உன் குணமா..
அப்படியானால் –
இறப்பது என் குணமடி..
ஏனடி வந்தாய் என் வாழ்வில்…
எப்படி வந்தாய் என் வாழ்வில்..
இந்த காதலுக்கு மட்டும்
வரத்தான் தெரியும்..
போகத் தெரியாது..
போடி..
வாழ்க்கையையே உனக்காக
தரத் துணிந்துவிட்டேன்.
தந்தும்விட்டேன்..
என் காதல் உனக்கு
புரியவில்லையா என் கண்ணே..
புரியவேண்டாம் என்று
புரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டாயா..
அதான் எனை கொல்லாமல்
கொன்று கொண்டிருக்கிறாய்..
உன் மனதைவிட
கடல் ஒன்றும் ஆழமில்லை..
உன் மௌனத்தைவிட
விஷம் ஒன்றும் கொடிதல்ல..
நீ இல்லா வாழ்க்கையைவிட
மரணம் ஒன்றும் கொடிதல்ல..



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: