உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்

Monday, August 16, 2010




உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாதான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்
தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே

கண்ணிரெண்டில் நான் தான் காதல் எனும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஒட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஒட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
அந்த வானம் அழுதாதான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்......
உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனைச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே


படம் : அபூர்வ சகோதரர்கள்
இசை : இளையராஜா

பாடியவர் : S.P.B


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: