அவள் ஊர் சென்றிருந்தேன்....

Friday, July 09, 2010



உன் ஊர் வந்திருந்தேன்.
கால்வாய் நீர்
கால்களைக் கடிக்க
அந்த வாய்க்காலோரம்
எதற்கோ காத்திருந்து திரும்பினேன்.
“அவ்ளோ தூரம் போயிட்டு
சாமி பார்க்காம திரும்பி வந்திருக்கியே
உனக்கு அறிவிருக்கா?”
அம்மா திட்டினாள்…
உங்கள் ஊர்வரை வந்துவிட்டு,
உன்னையே பார்க்காமல்
திரும்பியிருக்கிறேன்
சாமியாவது, பூதமாவது
சில விஷயங்களை
அம்மாவிடம் சொல்லமுடியாது…


- எங்கோ படித்தது -

அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: