அவள் இல்லா என் நாட்கள்..

Friday, July 09, 2010




 நாட்கள் நகர்கிறது

வெறுமையாய்…
வாழ்க்கை முடிகிறது
தனிமையாய்…

நீ வந்து
கை கோர்க்கவே
என் விரல்களிடையே
பிரிவை ஏற்படுத்தியிருக்கிறேன்…

நீ வந்தால்
உன்னிடம் தரவேண்டும்
என்பதற்காகவே
என் உயிரை
விட்டு வைத்திருக்கிறேன்…

உன் நினைவிகள்
என் வாழ்க்கையை
கொஞ்சம் கொஞ்சமாய்
தின்றுக் கொண்டிருக்கிறது…

உன் மௌனம்
என் இதயத்தை
அனு அனுவாய்
கொன்றுக் கொண்டிருக்கிறது…

என் தாகத்திற்கு
தண்ணீர் தருவாயோ…
இல்லை –-
என் காதலுக்கு
கண்ணீர் தருவாயோ…


பிடிக்கவில்லை என்றால்
ஒரு வார்த்தையில்
என்னிடமே சொல்லிவிடலாமே..
ஏன் உன்
மௌனத்தால் எனை
கொல்கிறாய்…

உன் கண்களிலிருப்பது
காதல் என்பது
என் கண்களுக்குத்
தெரியும்…

என் காதல்
உனக்குப் புரியும்…
புரியாமலிருப்பது போல்
நடிக்கிறாய்…

நான் உன்னை
காதலிக்கிறேன் என்பது
எனக்கு முன்னரே
உனக்குத் தெரியும்…

காதலர்தினம் இன்று..
இருக்கட்டுமே –
எனக்கென்ன…

நாம் ஒன்றாய்
இணைந்தால் –
தினம் தினம்
நமக்கு காதலர்ட்ஜினம்தான்…

என்னை பிடிக்கவில்லையெனில்
இன்றே சொல்லிவிடு..
நான் என் கல்லறைமீது
பொறிக்க ஒரு
இரங்கல் கவிதையை
இன்றே எழுத
துவங்கிவிடுகிறேன்…








இது நான் பிப்ரவரி 14 அன்று எழுதினேன். அதை என் வலைப்பக்கத்தில் பதிவு செய்ய விரும்பினேன். என் விருப்பத்தை நிறைவேற்றியும் விட்டேன்..


எல்லாம் வெறும் கற்பனைதான் மற்றவை போல..











அவள் நினைவுடன் -
தினேஷ்மாயா 

0 Comments: