கல்யாண தேன் நிலா

Friday, October 19, 2012





கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலா
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

திரைப்படம்: மௌனம் சம்மதம்
வரிகள்: வாலி
குரல்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

இந்த பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாடலின் வரிகள் அனைத்தும் இயைபுத்தொடையில் அமைந்திருக்கும்படி எழுதியிருப்பார் கவிஞர் வாலி அவர்கள். இந்த சிறப்பை என்னவள் எனக்கு சொன்னபின்னர் தான் நானே கவனித்தேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: