எவ்வளவோ முயற்சித்தேன்

Sunday, October 28, 2012




“எவ்வளவோ முயற்சித்தேன்”
   பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தோல்வியை நியாயப்படுத்த சொல்லும் வார்த்தை இது. வெற்றியாளர்கள் என்றுமே காரணங்களை சொல்வதில்லை. தோல்வியாளர்கள் மட்டுமே தங்கள் தோல்வியை ஏற்கமுடியாமல் காரணம் சொல்வார்கள். எவ்வளவோ முயற்சித்தேன் என்கிறார்கள். எவ்வளவு வரை முயற்சித்தார்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது. வெற்றியாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரை முயற்சிப்பதில்லை. அவர்கள் வெற்றி கிட்டும்வரை முயற்சிப்பார்கள். 

 NEVER GIVE UP - என்று ஆங்கிலத்தில் ஒரு நல்ல வாசகம் சொல்வார்கள்.எவ்வளவோ முயற்சித்தேன் என்று சொல்பவர்கள் எதோ ஒரு இடத்தில் முயற்சியை விட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், வெற்றி கிட்டும்வரை தொடர்ந்து  முயற்சி செய்பவனே வெற்றியை முத்தமிடுவான் என்று எத்தனையோ பழமொழிகள் இருக்கு, பல்வேறு நாட்டு மேதைகளும் பலவாறு சொல்லிவைத்து சென்றாலும் அதை நம் மனது தேவைப்படும் இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ள மறக்கிறது, மறுக்கிறது....


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: