ஓ சுகுமாரி

Thursday, October 11, 2012



ஓ சுகுமாரி
ஓ சிங்காரி
என் அலங்காரி நீ
ஓ சுகுமாரி யி …

ஓ சுகுமாரி
ஓ சிங்காரி
சுகுமாரி
ஏ குமாரி ஏ குமாரி
குமாரி

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி என் வார்த்தை கடல் வத்தி விட்டதே

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி என் வார்த்தை கடல் வத்தி விட்டதே

நான் தோற்று போவேன்
என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்திவைக்கிறேன்
ரகுமாரி …சுகுமாரி
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி என் வார்த்தை கடல் வத்தி விட்டதே
இந்த காதல் என்ன பெரும் பாரமா?
இது பேறு காலம் இல்லா கர்ப்பமா? ஓ…
காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என் உயிர் செத்து போகும் இல்லையா?
காதலை சொல்லி இல்லை என்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா?

ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசாய் சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய
இன்னோரு வாசல் இல்லை

குமாரி…

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோயிலை தேடி நடக்கின்றேன்
கூடை குடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்? பெண்
கண்களை பார்த்து காதலை சொல்லும்
தைரியம் உள்ளவன் அவன்.. அவன்.. அவன்..

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி என் வார்த்தை கடல் வத்தி விட்டதே

குமாரா உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா?
குமாரா உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குதா?
குமாரா உன் வார்த்தை கடல் வத்தி விட்டதா?

நான் தோற்று பொவேன்
என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம்
ஒத்திவைக்கிறேன்
ரகுமாரி …சுகுமாரி…
என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி

படம் : அந்நியன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், ஹரிணி

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: