நறுமுகையே நறுமுகையே

Thursday, October 11, 2012



நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீ ஒரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
மேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள்
என் மார்த்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள்
என் மார்த்துளைத்ததென்ன

பாண்டிநாடனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீ ஒரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளிப் போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
மேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
ஆ.. நீயா.. ஆ.. நீயா.. ஆ.. நீயா..

படம்: இருவர்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: