ஆசை

Sunday, October 28, 2012





  என் ஆயிரமாவது பதிவில் எனது சின்ன சின்ன ஆசைகளை பதிவு செய்திருந்தேன். இன்னும் சொல்ல ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் ஒளிந்திருக்கிறது. இப்போது சில வித்தியாசமான ஆசைகள் சிலவற்றை இங்கே பதிய விரும்புகிறேன்.

  • முற்றிலும் நான்கு சுவர்களால் மட்டுமே ஆன ஒரு அறை. அதில் கதவுகூட இருக்க கூடாது. மின்விசிறி, ஜன்னல், நாற்காலி இப்படி எதுவும் அங்கே இருக்க கூடாது. வெறும் அறையாக இருக்க வேண்டும். என்னிடமும் எந்தவொரு பொருளும் இருக்க கூடாது. அந்த அறையில் நான் ஒருநாள் இருக்க வேண்டும். என்னத்தான் நான் அப்படி செய்கிறேன் என்று நான் பார்க்க வேண்டும்.
  • ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு பொழுதில் தன்னந்தனியாய் தூரத்தில் இருக்கும் ஊர் நோக்கி என் கைப்பேசியில் பாடல்களை கேட்டவாரே நடந்து செல்ல வேண்டும்.
  • ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் மேலே இருந்து கீழே குதிக்க வேண்டும். பாராஷூட் உதவியுடன் !!
  • ஒரு நூறு அடியாட்களின் மத்தியில் தனியாளாய் மாட்டிக்கொண்டு, ஒரு ஹீரோ போல அனைவரையும் சண்டையிட்டு ஜெயிக்கனும்.
  • சஹாரா பாலைவனத்தில் ஒரு நாளை கடக்க வேண்டும்.
  • Igloo-வின் உள்ளே ஓரிரவு தங்க வேண்டும்.
 இனியும் நிறைய இருக்கு. அடுத்தபதிவில் சொல்கிறேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: