எங்கேயோ பார்த்த மயக்கம்

Friday, October 19, 2012




Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes !

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை என்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ ஏதானதோ
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விடைகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த‌ நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்திவள் பார்க்கும் போது
கடவுளை என்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

திரைப்படம் : யாரடி நீ மோகினி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : கார்த்திக், நவீன், உதித் நாராயணன்


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: