நீயும் நானும்

Monday, October 03, 2016

மனிதர்கள் இல்லா இடம் ஒன்று வேண்டுமடி

நம்மிருவருக்கும் தனியே ஒரு உலகம்

எங்கேயும் எப்போதும் ஒலிக்கும்

குயிலோசை

அலையோசை

பூந்தென்றல்

உயர்ந்த ஆலமரம் -

அதில் ஒரு ஊஞ்சல் -

அதில் நாமிருவரும்

படர்ந்த புல்வெளி -

சிறு சிறு பனித்துளிகளுடன்

கடற்கரை மரவீடு

முற்றத்தில் நிலா

எங்கு காணினும் தோட்டம்

பசியார ருசியான பழங்கள்

இலைகளே உடைகளாய்

கதைப்பேச நீ

கதைகேட்க நான்

உயிர்தர நான்

உயிர்பெற நீ

உன் மடியே சொர்க்கம்

உன் முத்தமே அமிர்தம்

போதும் போதுமென வாழ்ந்துவிட்டு

ஒன்றாய் உயிர்துறக்க வேண்டும்

நீயும் நானும்

* தினேஷ்மாயா *

0 Comments: