சாதிமல்லி பூச்சரமே

Monday, October 03, 2016



சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னிதமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்று தான்
கடுகு போல் உன்மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப்போல் எல்லோரும் என எண்ணனும்
அதில் இன்பத்தை தேடோணும்

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி

உலகமெல்லாம் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும் போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
யாதும் ஊரென்ன யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சு பாத்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னிதமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

படம் : அழகன்
இசை : மரகதமணி
குரல்: SPB

வரிகள் : புலமைப்பித்தன்

* தினேஷ்மாயா *

0 Comments: