எத்தனை பேர்

Tuesday, January 01, 2013



    எத்தனை பேர் மனதில் நீங்கள் ஆழமாக இருக்கிறீர்கள் என்பது, புத்தாண்டு தினத்திலும் உங்கள் பிறந்தநாளன்றும் இரவு 12 மணிக்கு உங்களை அழைத்து வாழ்த்து தெரிவிக்கும்போது தெரியும். 

  ஒரு காலத்தில் நண்பர்கள் புடைசூழ இருந்தவர்கள் இன்று வாழ்த்து தெரிவிக்க எவரும் இல்லாமல் இருக்கலாம், முன்பு எவரும் இல்லாதவர்கள் இப்போது பல நண்பர்களுடன் இருக்கலாம். ஆனால், இது வாழ்க்கையின் விளையாட்டுத்தான் என்பது எவர்க்கும் புரிவதில்லை. இந்த நிலையும் மாறும் விரைவில்.

    இந்த வருடம் பிறந்ததும் எனக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தது என் நண்பர் தியாகு அவர்கள். தொலைப்பேசியில் என் ஊரில் இருக்கும் நண்பன் மற்றும் தம்பி கோகுல், அப்புறம் தங்கை , அப்பா, அம்மா, தோழன் சுந்தர், தோழன் கார்த்திக், தம்பி பிரபா, தங்கை தீபா, தங்கை ஏஞ்சல், தோழி அருள்விழி. 

சில வருடங்களுக்கு முன்னால், மூன்று மணி வரையெல்லாம் அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கும். குறைந்தது 50 நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம். இன்று நிலை வேறு. எத்தனைபேர் நம்முடன் இருக்கிறார்கள் என்பதைவிட எத்தனைபேர் நம்முடன் கடைசிவரை இருக்கிறார்கள் என்றும், எத்தனைபேர் நம்முடன் உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதானே முக்கியம்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: