மல்லிக மொட்டு மனச தொட்டு

Thursday, January 24, 2013




மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ... ஓ...
தேனே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்க்கம்
நானிருந்தேன் சும்மா வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ... ஓ...
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா ஹோ... ஓ...
நீயே அடையாளம் போடவா

பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ... ஓ...
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா ஹோ... ஓ...
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே

படம் : சக்திவேல்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : அருண்மொழி, சொர்ணலதா
பாடல்வரிகள் : பொன்னியின் செல்வன்


இந்த பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த பாடலில் மெட்டுக்கே ஏத்தமாதிரி கதாநாயகனும் சரி, கதாநாயகியும் சரி பிண்ணனியில் நடனமாடுவோரும் சரி, அனைவரின் நடன அசைவுகளும் திரையில் மெதுவாக செல்வது போல இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இந்த பாடலை பாருங்கள். 

****தினேஷ்மாயா****

0 Comments: