மனம் விரும்புதே உன்னை

Monday, January 14, 2013




மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து இளமார்பில் ஒட்டியது ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவை போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்று வரை நம்பலையே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

படம் : நேருக்கு நேர்
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
வரிகள் : வைரமுத்து

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: