இசை வெள்ளம்

Sunday, January 27, 2013




                முன்பெல்லாம் இசை என்றால் கேட்க இனிமையாக இருக்கும். இப்போதெல்லாம் வெளிவரும் பல திரையிசை பாடல்களை கேட்டால் தலைவலிதான் அதிகம் வருகிறது. அதிகமான இசைக்கருவிகளை இசைக்கவிட்டு தேவையில்லாத இடத்தில் அதிகம் இசை எழுப்பி இசை வெள்ளத்தை ஏற்படுத்துகின்றனர். நாங்கள் இசை வெள்ளத்தில் நீச்சல் தெரியாமல் தவிக்க விரும்பவில்லை. ஒரு சின்ன ஆற்றங்கரையில் ஓரம் நின்று ஆற்றை ரசிக்கவே விரும்புகிறோம். வெளிநாட்டு கலாச்சாரம் நம் திரையிசையிலும் ஆதிக்கம் செலுத்துவதை பார்க்கும்போது மனம் நொந்துக்கொள்கிறது. இருப்பினும், கேட்பதற்கு இனிமையான இசையையும் தந்தவண்ணம் இருக்கின்றனர் பலர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இசை ஒரு கலை, அது அவனவன் ரத்தத்தில் உயிரில் கலந்திருக்கவேண்டிய ஒன்று. இசைக்கருவிகளை தட்டும்போது எழுவதையெல்லாம் இசையாய் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நான். இசையை பற்றி பேச நீ யார், உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறீர்களா. இசையுடன் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இசையை ரசிப்பவனுக்கு அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு.

- தினேஷ்மாயா -

0 Comments: