எங்கேயும் காதல்

Wednesday, January 16, 2013



எங்கேயும் காதல்  விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச 
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத 
கொள்ளாத பாடல்  பரவசம் தந்து பாதத்தில் ஓட 
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் 
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே 
மழை வெயில் என நான்கு காலம் நீயே 

கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே

எங்கேயும் காதல்  விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச 
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத 
கொள்ளாத பாடல்  பரவசம் தந்து பாதத்தில் ஓட 
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் 

அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே 
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே 
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே பார்க்காதே 
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே 
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூச்சென்டாய் பூமி திண்டாடும் 

எங்கேயும் காதல்  விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச 
விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத 
கொள்ளாத பாடல்  பரவசம் தந்து பாதத்தில் ஓட 
முதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் 
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே 
மழை வெயில் என நான்கு காலம் நீயே 


படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: