தைப்பொங்கலும் வந்தது

Sunday, January 13, 2013



பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு
முப்போகம் யாரால?
கல்மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோடு சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோட சேதி சொல்ல
காத்து வராதா?
செவ்வாழ செங்கரும்பு
சாதிமல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்க
ஏதுமில்ல வாட்டம்தான்
நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி

படம்: மஹாநதி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: