நம் இமயம் அறக்கட்டளையின் சார்பாக, திண்டுக்கல் அருகே இருக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில் இருக்கும் R.C. கருணை இல்லத்தில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினோம்.
இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம், பொங்கல் வைத்து, உணவிற்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவித்து இயற்கைக்கு படைத்தோம்.
கலை நிகழ்ச்சிகளும் நடத்தி, சில விளையாட்டு போட்டிகளும் நடத்தி அவர்களுடன் நாமும் விளையாடி மகிழ்ந்தோம்.
உதவி புரிந்த நல்ல உள்ளங்களுக்கும்,
வருகை புரிந்த அன்பு உள்ளங்களுக்கும், நம் இமயம் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைதூதன் ஏசு கிறிஸ்து..

வரவேற்புரை

நடன நிகழ்ச்சி

வருகை புரிந்த அன்பு உள்ளங்கள்..


பொங்கல் பானையை நடுவில் வைத்து கும்மி அடித்து நடனமாடினர்..











பொங்கல் என்றால், கரும்பு இல்லாமலா??

பாட்டுக்கு பாட்டு விளையாடினோம்..


பொங்கலோ பொங்கல்...
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment