பெருமாள் தரிசனம்

Tuesday, January 01, 2013



      இன்று திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்திற்கு இன்று மாலை சென்று தரிசனம் செய்தோம். இன்றைய விஷேஷம் என்னவென்றால், பெருமாளுக்கு மஹாலட்சுமு அலங்காரமும், சௌந்தரவள்ளி தாயாருக்கு பெருமாள் அலங்காரமும் செய்திருந்தார்கள். பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. ஆலயமும் தூய்கமையாகவும் அமைதியாகவும் இருக்கிறது. ஆலயத்தில் இருக்கும் சிற்பங்கள் அவ்வளவு அருமையாகவும் தத்ரூபமாகவும் இருக்கிறது. வரும்போது சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும், லட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்தோம். மனதிற்குள் ஒரு அமைதி ஒரு ஆனந்தம். இந்த வருடபிறப்பிற்கு இங்கே வந்து வழிப்பட்டது இன்னமும் மகிழ்ச்சி.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: