அட்சய திரிதியை

Friday, March 22, 2013




     அட்சய திரிதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் தங்கம் நம் வீட்டில் தங்கும் என்று சொல்வார்கள். மேலும் மேலும் தங்கம் சேரும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது நம் மக்களிடம். எனக்கு இதில் அதிகம் நம்பிக்கை இல்லை. செல்வமும் அதிர்ஷ்டமும் அது இஷ்டம் போல் நம்மிடம் வரும் சொல்லாமலே நம்மைவிட்டு சென்றுவிடும். அப்படியிருக்க எப்போதும் தங்கம் நம்மிடையே தங்கும் என்கிற நம்பிக்கையை முன்னோர்காலத்தில் இருந்து நம்பிவருவதால் நமக்கு என்ன பயன் இருக்கிறது சொல்லுங்கள்.

     யார் என்ன சொன்னாலும் ஏன் எதற்கு என்று முதலில் கேட்க பழகுங்கள். கேள்விகள் கேட்கப்படும் போதுதான், சுதந்திரத்திற்கான உண்மையான கதவு திறக்கப்படுகிறது. எதையும் நம்பும் முன் பலமுறை உங்கள் பகுத்தறிவை கொண்டு ஆராய்ந்து பின்னர் நம்புங்கள்.

* தினேஷ்மாயா *

0 Comments: