நான் மனிதன் தானே !

Friday, March 22, 2013





    எனக்கு இவ்வுலகில் அதிகம் பிடித்த விஷயம் என்னவென்றால் என் வலைப்பக்கத்தில் எழுதுவதுதான். இறக்கும்வரை நான் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என் வலைப்பக்கத்தில். பகிர்ந்துக்கொள்ளவும் பதிவுசெய்யவும் அவ்வளவு இருக்கிறது மனசுக்குள். எழுத துவங்கிவிட்டால் பசி,தூக்கம் என்று எதுவும் தெரியாது எனக்கு.

   இன்று புதிதாய் பிறந்தேன் என்பதுபோல இன்று என் பிறந்தநாள். மார்ச்-22. 
இன்று என்ன விசேஷம் என்று என் நண்பர்கள் அனைவரும் கேட்டனர். எதுவுமில்லை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டேன். ஆனால் இப்போது நான் இருக்கும் மும்முரமான காலத்தில் என் வலைப்பக்கத்தில் எழுதுவதுதான் எனக்கு மிகவும் விசேஷம். அதனால் நள்ளிரவு 2  மணிமுதல், இதோ இப்போது நேரம் காலை 6 மணி ஆகிவிட்டது. நான்கு மணிநேரங்களாக என் வலையை உறங்காமல் பிண்ணிக்கொண்டிருக்கிறேன். கிட்டதட்ட ஒரு ஐம்பது பதிவுகளுக்கு மேலே இன்று எழுதியிருப்பேன். என் அடுத்த பதிவை நான் பதியும்பொழுது என் வலைப்பக்கம் கேட்கிறது நீங்கள் ஒரு ரோபோ இல்லை என்பதை நிரூபியுங்கள் என்று. அதை மேலே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே.

நான் மனிதன் தானே !!

1 Comments:

sanasuthan said...

Unbelievable character you are......... Nice