நான் ஆணையிட்டால்...

Wednesday, October 13, 2010



நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று பாடியவர்கள் பலர் உண்டு நம் நாட்டில். நான் நம் தமிழக முன்னால் முதல்வரை மட்டும் சொல்லவில்லை. நம் இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும்தான் சொல்கிறேன். 
நான் ஆணையிட்டால் அதாங்க நான் அல்லது நாங்க ஆட்சிக்கு வந்தா அதை செய்வோம் இதை செய்வோம் என்றெல்லாம் வீர வசனம் பேசி திரிகின்றனர் அனைவரும். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எவனாச்சும் நாட்டை கொஞ்சமாவது திரும்பி பார்க்கிறானா. அவஸ்தைப்படுவதென்னவோ நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கமும், ஏழை வர்க்கமும் தான். பணம் படைத்தவன்தான் இன்று உலகை ஆளுகின்றான் என்பதை யாராலும் மறக்க முடியாது. மேலே நீங்கள் பார்ப்பது இன்றும் அவல நிலையில் இருக்கும் நம் இந்தியாவின் ஒரு குடிசைப்பகுதி. இது வேறெங்குமில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில்தான் !!!

எவனும் திருந்தமாட்டான்னு நல்லா தெரியுது. நாமாச்சும் திருத்த முற்படுவோமே ...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா


0 Comments: