கடவுள் இருக்கிறாரா

Wednesday, October 13, 2010



எந்திரன் படம் பிடிச்சு இருக்க பிடிக்கலையா என்றெல்லாம் நான் இப்போது கருத்து தெரிவிக்கவில்லை..
எந்திரன் படத்தில் என்னால் மறக்க முடியாத சில காட்சிகள் உள்ளது..


வசீகரன்( ரஜினி ) தான் உருவாக்கிய ரோபோவை மக்கள் மத்தியில் ஒரு மேடையில் அறிமுகப்படுத்துவார்.. பலரும் ரோபோவிடம் கேள்விகள் கேட்பார்கள். அதில் ஒன்று..

“கடவுள் இருக்கிறாரா, இல்லையா?”

அதற்கு அந்த ரோபோ கடவுள் யார் என்று கேட்கும்..
அதற்கு அவர், கடவுள் தான் நம்மை எல்லாம் படைத்தவர் என்று சொல்வார்..
உடனே அந்த ரோபோ,

“என்னை படைத்தவர் டாக்டர் வசீகரன், கடவுள் இருக்கார்” என்று சொல்லும்போது நான் அப்படியே சிலிர்த்து போயிட்டேன்..

கடவுள் இருக்கிறார் என்று ஒரு ரோபோவே தெரிவிப்பதுபோல இருந்த காட்சி அமைப்பு என்னை என்னவோ செய்துவிட்டது. அதிகம் யோசிக்க வெச்சது..

உண்மைதான்...

நம்மை படைத்தது நம் தாய்தான். தாய்தான் நம் கடவுள் ....

கடவுள் இருக்கிறார்.... என் அன்னை இருக்கிறாள்...............


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: