சின்ன சின்ன ஆசை !

Friday, August 04, 2017


      மழை வரும்போதோ அல்லது மழை நின்ற பின்னரோ, நாமிருவரும் நம் வீட்டின் முற்றத்தில் நின்றுக்கொண்டு, நான் உன் தோளில் சாய்ந்துக்கொண்டு தேநீர் பருக வேண்டும் என்று தன் சின்ன ஆசையை என்னிடம் தெரிவித்தாள் என்னவள்..

       அத்துடன், என் ஆசை ஒன்றையும் அவளிடம் சேர்த்துக்கொள்ள சொன்னேன்.  மழை வந்தால், இடம் பொருள் ஏதும் பார்க்காமல், நாமிருவரும் முதலில் மழையில் நனைவோம், பிறகு நீ சொன்னபடி வீட்டினுள் வந்து மழையை இரசித்தவாறே தேநீர் பருகுவோம் என்றேன். 

           என் ஆசைகளை அவளது ஆசைகளாக அவள் ஏற்றுக்கொள்கிறாள், அவளது ஆசைகளை எனது ஆசைகளாக நான் ஏற்றுக்கொள்கிறேன் !!

* தினேஷ்மாயா *

0 Comments: