மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு

Tuesday, August 01, 2017




மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி...
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்

மனம் படைத்தேன் ... ஏ...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


படம்: கந்தன் கருணை
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா

அவள் எனக்கு பகிர்ந்த பாடலை இங்கே நான் பகிர்கிறேன். இந்த சந்தர்ப்பத்திற்கேற்ற பாடல் !! என் மனதை உருக்கிய பாடல்.

வரிகள் தந்த கண்ணதாசனுக்கும், குரல் கொடுத்த சுசீலா அவர்களுக்கும் நன்றி. இப்பாடலை எனக்கு தந்த என்னவளுக்கு வெறும் நன்றிகள் போதாதே !!

* தினேஷ்மாயா *

0 Comments: