மாயா வேண்டாம்..

Monday, March 15, 2010





எனக்கு மாயா வேண்டாம்....
ஆம்.. தேவையில்லைதான்..
என் மாயாமீது நான் வைத்திருக்கும் அன்பும் காதலும் எனக்கு மட்டுமே தெரியும்.. அது இந்த அன்பும் காதலும் இல்லாத உலகில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்..
மாயா வேண்டாம் என்றால்...
இந்த பொய்யான உலகில் இருந்து கிடைக்கும் அவள் என் மாயாவாக இருக்க மிக குறைவான சாத்தியங்களே உள்ளன.. 
நானும் என் மாயாவும் எங்கள் உலகிலேயே இருந்துவிடுகிறோமே...
அந்த உலகில் எங்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இல்லை..
அதனால் போலியான மனிதர்கள் இல்லை.. கைத்தேர்ந்த நடிகர்கள் இல்லை..
ஆனால் என்று என் கனவுகளையும் என் காதலையும் உண்மையாக புரிந்துக்கொண்டு அவள் என்னை திரும்பிப்பார்க்கிறாளோ அன்று சொல்வேன்
எனக்கு மாயா வேண்டும் என்று.. நீதான் என் மாயா என்று..
கொஞ்சம் மேலே பாருங்கள்.. நான் என் மாயாவை எங்கே வைத்துள்ளேன் என்பதை.. யாரும் எட்ட முடியாத உயரத்தில் !
அந்த கண்களும் உண்மை அதில் இருக்கும் காதலும் உண்மை.. :)
இருப்பினும் மாயா என் காதலை உணரும் வரை என் மாயா என்றும் என்னுள்ளேயே இருக்கட்டும்..


தினேஷ்மாயா


{ நான் என்ன சொல்லியிருக்கேன் என்று எனக்கே ஒன்றும் புரியவில்லை.. பின் உங்களுக்கு எப்படி புரியும்..! :)  ஏதோ இதை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.. அதான்..  }

0 Comments: