அப்பாக்களுக்கும் பிரிந்து தவிக்கிற மகள்களுக்கும்

Sunday, September 08, 2013



* அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிற ஒரே இடம், பள்ளிக்கூடம் மட்டும்தான்.

* இறந்தபின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது, மகள்களின் மனதில் மட்டும்தான்.

* மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம், காமத்தில் சேர்ந்ததில்லை என்று.

* அப்பாக்களை பிரியா மகள்கள், அதிர்ஷ்டசாலிகள். மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள். ஆனால், அப்படியெல்லாம் தந்துவிட, வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை.

* மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக்கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.

* பொருள்தேடி பணம்தேடி மகள்களை எல்லாம் விட்டுவிட்டு வெகுதூரத்தில் செவித்துக்கொண்டிருக்கிற அனைத்து அப்பாக்களுக்கும் பிரிந்து தவிக்கிற மகள்களுக்கும் ...

நேற்றிரவு தங்கமீன்கள் படத்தைப்பார்த்தேன். படத்தைப்பற்றி பதிய விரும்பினேன். ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அந்த அவசரத்தில்கூட இந்தப்படத்தின் TRAILER-ல் வந்த சில வசனங்களை பதிய விரும்பினேன். திரைப்படத்தைப்பற்றிய என் பதிவுகளை ஊரில் இருந்து வந்ததும் பதிகிறேன்.

நன்றி..

* தினேஷ்மாயா *

0 Comments: