தந்தை சொல்மிக்க

Friday, September 20, 2013


தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இனியவை நாற்பது நூலில் ஏழாம் பாடலை கொஞ்சம் பாருங்கள்..


“அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது.” 

பொருள்:

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.


இந்த கருத்தையும் நாம் நம் மனதில் கொஞ்சம் வைத்திருப்போமே ..

* தினேஷ்மாயா *





0 Comments: