எனக்குள் ஒரு சாத்தான்

Thursday, September 05, 2013


    எனக்குள் ஒரு சாத்தான் இருக்கிறது. எனக்குள் மட்டுமல்ல அனைவருக்குள்ளும் நிச்சயம் ஒரு சாத்தான் இருந்தேதீரும். பல நேரங்களில் தூங்கியே கிடக்கும் அது எப்போதாவது சில நேரங்களில் மட்டும் விழித்துக்கொள்கிறது. அது எப்போது விழிக்கும் என்று நமக்கும் தெரியாது அந்த சாத்தானுக்கும் தெரியாது. நமக்குள் ஒரு சாத்தான் இருக்கிறது என்கிற உண்மையை வெகுசுலாமாக எவராலும் உணர்ந்துவிட முடியாது. அதை உணர்ந்தவரும் அதை கட்டுப்படுத்த முடியாது.

          சரி, இந்த சாத்தானை என்னத்தான் செய்வது என்று கேட்கிறீர்களா. இதற்கு ஒரே பதில் - அதை அப்படியே அதன்போக்கில் விட்டுவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இல்லையேல் அந்த சாத்தான் உங்களுக்கு எதிராகவே திரும்பவும் செய்யும். இயன்றவரை அந்த சாத்தானை விழிக்கவைக்காமல் இருக்க உங்கள் சிந்தனைகளை நல்ல விஷயங்களை நோக்கி செலுத்துங்கள். அதுவே போதும். 

               மனிதனுக்கு எப்படி இரண்டு கைகள், இரண்டு கால்கள் இப்படி எல்லாவற்றையும் ஆண்டவன் படைத்திருக்கிறானோ, அதுப்போலவே நமக்குள்ளும் ஒரு சாத்தானை வைத்து படைத்திருக்கிறான் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை..

* தினேஷ்மாயா *

0 Comments: