காதல் என்பது பொது உடமை

Wednesday, September 18, 2013




காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணி பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
 நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு
தினம் காண எண்ணுர மனசு
இத சேர துடிக்கும் வயசுதான்
வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல
வாலிபம் கொஞ்ச நேரம்தான்

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை

அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா

படம் : பாலைவன ரோஜாக்கள்
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

இப்பாடலின் முதல் இரண்டு வரிகள்தான் என்னை அழவைத்த வரிகள். என் கண்ணீரை இங்கே பதிந்தபிறகுதான் கண்ணீரும் முற்றுபெற்றது..

* தினேஷ்மாயா *

0 Comments: