எல்லாம் கடந்து போகுமடா

Friday, September 13, 2013



எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
ஹோ ஹோ..

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

இரவும் பகலும் இல்லையென்றால்
ஒரு நாளிங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால் அதன்
ஒளி தான் குறைந்திடுமா

வாழ்க்கை ஒரு வட்டம்
கேள்வி கேட்பதொரு குற்றம்
இதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா
கண் தூங்கதடா தம்பி

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா

தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
ஹோ....

படம்: சூது கவ்வும்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: RR
பாடியவர்: கோவை ஜலீல்

* தினேஷ்மாயா *

0 Comments: