யாருமில்லா தனியரங்கில்

Sunday, August 30, 2015


யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்
ஓ அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனியரங்கில்
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
ஹா எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில்

பேச மொழி தேவை இல்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல் உன்னைத் தேடும்

திரைப்படம்: காவியத்தலைவன்
பாடியவர்: ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
குரல்: ஸ்வேதா மோகன், ஸ்ரீனிவாஸ்

* தினேஷ்மாயா *

0 Comments: