வேண்டுதல்

Monday, August 03, 2015


    கோயிலுக்கு சென்று தம் நன்மைக்காக வேண்டுவோர்தான் இங்கே அதிகம். அந்த வேண்டுதலால் உங்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 

   எப்போதாவது உங்களை ஒரு ஆம்புலன்ஸ் அவசரமாக கடந்து சென்றால், அதில் இருப்பவர் விரைவில் குணமடையனும் என்று ஒரு நொடி கண்ணைமூடி அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அது அவருக்கும் சரி, உங்களுக்கும் சரி சிறந்த பலன்களை கொடுக்கும். 

   வேண்டுதல் என்பது நமக்காக மட்டுமே இருந்துவிடக்கூடாது. பிறருக்காகவும் வேண்டிக்கொண்டால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.

* தினேஷ்மாயா *

0 Comments: