உயிர்

Tuesday, July 22, 2014



நேற்று பேருந்தில் பயணிக்கும்போது எனக்கு சில கேள்விகள் உதித்தது.

உயிர் எப்படி நம் உடலுக்குள் வருகிறது, எந்த வழியாக அது வெளியேருகிறது?

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு கருவை உருவாக்குகிறார்கள். அந்த கரு தாயின் கருவறையில் வளர்ந்து உடலைப் பெருகிறது. அப்படியானால் அந்த உடலுக்கு உயிர் எங்கிருந்து வருகிறது. எப்படி அந்த உயிர் அந்த உடலுக்குள் செல்கிறது ?

இது இருக்கட்டும் விடுங்கள். உயிர் எப்படி உடலைவிட்டு செல்கிறது. நவதுவாரங்கள் என்பதற்கும் உயிர் பிரிவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ?

உயிர் எப்படி நம் உடலில் இருந்து பிரிகிறது ? ஒருவர் வயதாகி இறக்கிறார் என்றால், அவரின் உயிர் போகும் அந்த நொடியில் அவர் உடலில் நடக்கும் மாற்றம் என்ன ? வெறும் இதயத்துடிப்பு நிற்பது மட்டும்தானா ?

இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால் உயிர் பிரிந்துவிட்டதாக அர்த்தமா ? உயிர் பிரிவதை இன்றைய அறிவியல் வேண்டுமானால் இப்படி சொல்லலாம், ஆனால் இதற்கும் மேலான விளக்கம் ஒன்று நிச்சயம் இருந்தேயாக வேண்டும். என்னவென்று இன்னும் ஆரய்ந்து பிறகு பதிவு செய்கிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: