யார் போட்ட கோலமிது…

Tuesday, October 18, 2011




யார் போட்ட கோலமிது…
தோள் சேரும் காலமிது…
கோவில் வாசல் மூடிவிட்டால்
கிளிகள் வாழ இடமாயில்லை…
கோபுரத்தில் கூடுகட்ட
கேள்விகேட்க யாருமில்லை..
நம் வாழ்க்கை சிறுபிள்ளை செய்கின்ற மண்சோறு
கல்லுண்டு மண்ணுண்டு
மண்ணோடு மணமுண்டு..
யார் போட்ட கோலமிது…
தோள் சேரும் காலமிது…
இரவு ஏன் வருகிறது
உறவு ஏன் அழுகிறது
காலம் ஜாலம் புரிகின்றது
கருத்தில் யாவும் தெரிகின்றது
கனவெல்லாம் மழைப்பெய்தால்
தலையனைகள் நனைந்திடுமா..
தவளைகள் தாண்டியதால்
தாமரைதான் உடைந்திடுமா…
கடல்தாண்டும் பறவை
இளைப்பாறத்தானே வழிப்பாறை ஒன்று
அங்கேயும் உண்டு..
யார் போட்ட கோலமிது…
தோள் சேரும் காலமிது…
வரலாற்றின் பதிவுகளில்
வலியில்லா வாழ்வில்லை
உலகமிது உனக்கல்லவா
ஓடாத நீர் சேரல்லவா
அன்புக்கு விதை தெளித்தும்
அறுவடைக்கு ஆள் இல்லை
உன் மனமென்னும் வயலோரம்
மெல்ல கதிரொன்று தலைக்காட்டும்
ஒரு புள்ளி முற்றும்
மறு புள்ளி தொடரும்
மனம்வைத்தால் போதும்
உன் வாழ்வு மலரும்…
யார் போட்ட கோலமிது…
தோள் சேரும் காலமிது…
கோவில் வாசல் மூடிவிட்டால்
கிளிகள் வாழ இடமாயில்லை…
கோபுரத்தில் கூடுகட்ட
கேள்விகேட்க யாருமில்லை..
நம் வாழ்க்கை சிறுபிள்ளை செய்கின்ற மண்சோறு
கல்லுண்டு மண்ணுண்டு
மண்ணோடு மணமுண்டு..
யார் போட்ட கோலமிது…
தோள் சேரும் காலமிது…

திரைப்படம் : ABCD

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: