கேர் ஆப் பிளாட்பாரம்..

Tuesday, October 11, 2011




02-06-2007 முதல் 04-06-2007
மற்றும்
10-07-2007 முதல் 12-06-2007

நான் ஒரு கேர் ஆப் பிளாட்பாரம் !!!

இதற்கு காரணகாரியங்களை சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் தேவை.. அதுமட்டுமல்லாமல் அனைவரிடமும் என் சோகத்தை நான் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன். என் மனதில் நெருக்கமான இடம் பெறுவோரிடம் மட்டுமே சொல்வேன்... என் கதையை விடுங்க..

நான் கேர் ஆப் பிளாட்பாரமாக கிட்டத்தட்ட ஒருவாரம் இருந்திருக்கேன். இதற்கு நான் முதலில் என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்து நிறுத்திய கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும். இந்த அனுபவத்தை நான் பெற வேண்டும் என்று அவன் நினைத்திருக்கிறான். எனக்குத் தெரியும் நான் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு நிச்சயம் ஒருநாள் வருவேன் என்று. அதற்கு முன் நானும் ஒரு அடிமட்ட குடிமகனாக இருந்து பார்க்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான் அதை நானும் பின்னர் உணர்ந்துக்கொண்டேன்..

நான் கேர் ஆப் பிளாட்பாரமாக இருந்ததை மறைக்கவும் விரும்பவில்லை மறுக்கவும் விரும்பவில்லை. அதை நினைத்து பெருமைப்படுகிறேன்..

போங்கடா.. எத்தனை பேருக்கு இங்க தைரியமிருக்கு, தங்களின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்து சொல்ல.. உண்மை எதுவானாலும் சரி.. அதை நான் எங்கேயும் எப்போதும் சொல்வேன்.. ஏன்னா..

நான் இப்படித்தான்... :)

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: