மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

Wednesday, October 19, 2011



மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
கண்ணம்மா…
ஜன்னம் தந்தாய் சலனம் தந்தாய்
காதல் மொழியில்..
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம்
உந்தன் கனவில்
என்றும் வாழ்க வாழ்க இன்ப நேரங்கள்…
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்…
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்…
என்றும் வெல்க வெல்க இவன் ஆசைகள்…
ஒரு சேதி அடி நீயென்பதென் பாதி
இனி நானென்பதுன் மீதி தேதி சொல்லம்மா…
மௌனமே பார்வையாய்
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
கண்ணம்மா…
இலக்கணம் உடைத்ததும் கவிதைவரும்
இரவினை துடைத்ததும் கனவுவரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசைமலரும்
உணர்வினை கழன்றதும் கலைமலரும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தாலென்ன
விழி ஜாடைகள் பேசியே நடந்தாலென்ன
என்றும் வாழ்க வாழ்க இன்ப நேரங்கள்…
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்…
மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்…
என்றும் வெல்க வெல்க இவன் ஆசைகள்
ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர..
தொல்காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே தேட..
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா…

திரைப்படம் : அன்பேசிவம்...

குறிப்பு : நான் என் மனதை மிகவும் ஆழமாக தொட்ட பாடல்களைத்தான் இங்கே பதிவு செய்கிறேன். உங்களால் முடிந்தால் இந்த பாடல்களை தனிமையில் கேட்டுப்பாருங்களேன்..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: