ஒருநாளில் வாழ்க்கை இங்கே...

Sunday, October 16, 2011




ஒருநாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடிப் போகாது
மறுநாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூப்பூக்கும்
ஹோஹோஹோ
கருவாசல் விட்டு
வந்த நாள்தொட்டு..
ஹோஹோஹோ
ஒரு வாசல் தேடியே
விளையாட்டு
ஹோஹோஹோ
கண் திறந்துப் பார்த்தால்
பல கூத்து
ஹோஹோஹோ
கண் மூடிக் கொண்டால்...
ஹோஹோஹோ
போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை..
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலியொன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னைவிட்டு
விலகிவிடும்..
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று
விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்….
தீராது இந்த தனிமை
கரைவரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால்கூட
ஏறி நின்று போர்த்தொடுப்போம்
ஹோஹோஹோ
அந்த தெய்வ ரகசியம்
புரிகிறதே
ஹோஹோஹோ
இங்கு எதுவும் நிலையில்லை
கரைகிறதே
ஹோஹோஹோ
மனம் வெட்ட வெளியிலே
அலைகிறதே
ஹோஹோஹோ
அந்த கடவுளைக் கண்டால்
ஹோஹோஹே.. ஹே.. ஹே..
அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு..
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்
ஹோஹோஹோ
பல முகங்கள் வேண்டும்
சரி.. மாட்டிக்கொள்வோம்
ஹோஹோஹோ
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோஹோஹோ
கதை முடியும்போக்கில்
அதை முடித்துக்கொள்வோம்
ஹோஹோஹோ
மறு பிறவி வேண்டுமா….
ஹோஹோஹே ஹே ஹே


திரைப்படம் : புதுப்பேட்டை...

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: