கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

Wednesday, October 19, 2011




கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும்
தலைவா எம் தலைவா
ஊனம் உள்ள பேரைக் காத்திடும்
இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே….


திரைப்படம் : அன்புள்ள நஜினிகாந்த்


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: