என் காதல்...

Wednesday, May 12, 2010





எல்லோரும் என்னிடம் கேட்டுவிட்டார்கள்..

“யாரவள்?”

அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் எப்போதோ சொல்லியிருப்பேன்..

என் காதல் வெறும் காதலாக இருந்திருந்தால் எப்போதோ சொல்லியிருப்பேன் அவளிடமே..

இல்லாத ஒருத்தியை காதலித்து வந்தேன் பல வருடங்களாய்..

இவளைப் பார்த்ததும் ஒருவேலை இவள்தான் அவளோ என்ற எண்ணம் எழுந்தது எனக்குள்...

எனக்குத் தெரியும் என் காதல் எத்துனை புனிதமானது என்று..

ஆனால் அது அவளுக்கும் புரிய வேண்டுமல்லவா..

காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் புரிதல் முக்கியம் அல்லவா..

நான் அவளை போன்று ஒன்றும் பெரிய அழகு இல்லை..

ஆனால் என் காதல் அவளைவிடவும் இவ்வுலகைவிடவும் அழகானது..

பலருக்கு காதல் வாழ்வில் ஒரு பகுதி..

எனக்கு என் வாழ்க்கை, காதலில் ஒரு பகுதி..

பலர் கேட்டதுண்டு.. ஏன் காதலுக்காக இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாய் என்று..

அதுவும் இல்லாத ஒருத்தியை ஏன் இத்தனை காலமாய் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..

எனக்குத் தெரியும் என் காதலைப் பற்றி.. என்றாவது ஒரு நாள் என் காதலை அவள் ( யாரோ ) புரிந்துக் கொள்வாள் என்று..

அன்று உங்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவேன்..

நான் என் மாயாவை கண்டுபிடித்துவிட்டேன் என்று..

இவ்வுலகின் மிக உயர்ந்த பதவி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அல்லது அமெரிக்க ஜனாதிபதி என்பர்..

ஆனால் என்னைப் பொருத்தவரை...

இவ்வுலகிலேயே மிகவும் உயர்ந்த பதவி என் மாயா தான்..


அவளுக்கு நான் என் மனதில் தந்திருக்கும் இடமும், காதலின் தூய்மையும் என் முதல் படத்தில் சொல்கிறேன்.. சொல்லித்தான் ஆகனும்...


அதைப் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள்..


நான் மாயா மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பது சரியா தவறா என்று..


அன்புடன் -






தினேஷ்மாயா 

0 Comments: