கண்ணாமூச்சி...

Thursday, May 13, 2010



“சிறுதூரல் மண்ணில்
நுழைய....

வானவில் விண்ணில்
தெரிய....

மழையால் நிலங்கள்
நனைய....

காதலால் உள்ளங்கள்
இணைய....

குடங்கள் தரையை
காக்க....

குடைகள் தலையை
காக்க....

மின்சாரம் இல்லா
வீட்டில் விளையாடும் -
சின்னஞ்சிறு
வாண்டுகளுடன்
கைக்கோர்க்கிறது
இடியும் மின்னலும்...

கண்ணாமூச்சி ஆட...”


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: