கிறுக்கல்கள்...

Friday, February 05, 2010


என் கவிதைகளை படித்துப் பார்த்துவிட்டு என் நண்பன் சொன்னான், உன் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால் எதுகை மோனையுடன் இருந்தால் படிக்க நன்றாக
இருக்குமே என்றான்.
நான் அவனிடம், என் மனதில் பட்டதை, என் மனதிற்கு பிடித்ததை எந்தவொரு தயக்கமும் இன்றி பதிவுசெய்கிறேன், என்றேன்.
ஆனால் அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இனி நான் என் கவிதைகளை இலக்கிய இலக்கண நயத்துடன் படைக்க முயல்கிறேன். நிச்சயம் ஒருநாள் மரபு கவிதைகளின் சாயலை என் கவிதைகளிலும் நீங்கள் பார்க்க முடியுமென உறுதியாய் கூறுகிறேன்....

மீண்டும் சந்திப்போம்...

அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: