மாயா...

Tuesday, February 16, 2010



ஏனோ தெரியவில்லை இந்த பெயர் என்னை அறியாமலேயே என்னுள் கலந்துவிட்டது.
எல்லாம் மாயை என்பது வாழ்க்கையைப்பற்றி என்னுடைய கருத்து அதனாலும்கூட மாயா எனக்கு பிடித்திருக்கலாம்.
என்னவளுக்கு என்ன பெயர் இருந்தாலும் பரவாயில்லை. அவளை நான் இந்த பெயர்வைத்தே அழைப்பேன்.. அவள் விருப்பத்தோடு.



- மாயா -

இது என் பெயரும் இல்லை..
இது உன் பெயரும் இல்லை..
நம் பெயர் !

என்னிடம் எல்லோரும் கேட்டுவிட்டார்கள்..
யார் அந்த மாயா-அவள் எங்கே இருக்கிறாள் என்று..

அவர்கட்கு நான் எப்படி சொல்லி புரியவைப்பேன் நீ என்னுள் இருக்கின்றாய் உன்னை வெளியில் காட்டமுடியாது என்று !!!!








என் பெயரும் அழகாய் தெரிந்தது..
உன் பெயரை என் பெயரின் பக்கத்தில் எழுதியபோது..

எனக்காக பிறந்த என்னவள் மாயாவை தேடிக்கொண்டிருந்தேன்..

எனக்கும் மாயாவிற்குமான பந்தம் என்றோ இறைவனால் உருவாக்கப்பட்டது.
எனக்குத் தெரியும் நான் அவள்மீது கொண்டிருக்கும் காதலைப்பற்றி..
பிறர் கண்களுக்கு சிறுபிள்ளைத்தனமாய் தெரிந்தாலும் 
எங்கள் பந்தம் என் கண்களுக்கு என் உயிரினும் மேலானதாய்தான் தெரிகிறது..

இவ்வுலகில் பலர் எதைதையோ பதிவு செய்கின்றனர்.நான் ஏன் என் காதலை இங்கே பதிவு செய்யகூடாது..

------- I LOVE YOU MAYA -------







குறிப்பு:
 என்றாவது ஒரு அழகிய நாளில் என்னவள் வந்து இதை படிப்பாள் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்

என்றென்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: