சொல்லிட்டாளே அவ காதல

Saturday, November 30, 2013


சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போலொரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போலொரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

ம். ம். .ம் .ம். .

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

திரைப்படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

இந்த படத்தை திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து கிட்டதட்ட 6 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். படமும் சரி, இப்படத்தின் பாடல்களும் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத ஒன்று. எனக்கு எப்போதாவது மனம் கொஞ்சம் சோகமும் கொஞ்சம் சந்தோஷமும் கலந்த ஒரு நிலையில் இருக்கும்போதெல்லாம் இப்பாடலை கேட்பேன். இந்த பாடலிலும் கொஞ்சம் சோகமும் இருக்கிறது கொஞ்சம் மகிழ்ச்சியும் இருக்கிறது.

* தினேஷ்மாயா *

0 Comments: