என்னவள் வளையல்

Thursday, November 28, 2013



       அவள் என்னுள் எவ்வாறெல்லாம் கலந்திருக்கிறாள் என்பதை வார்த்தைகளில் என்னால் சொல்லிவிட முடியாது. அவளை சார்ந்த நினைவுகள் வராத நாளில்லை. அதற்காக நான் துவண்டுவிடவும் இல்லை. இருப்பினும் அந்த பசுமையான நினைவுகளையும் கொஞ்சம் வலியையும் நான் இன்றளவும் ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். \

             என் பள்ளிக்கூட பொதுத்தேர்வுக்கு கணித தேர்வின்போது வடிவியல்(Geometry) சம்பந்தமாக வட்டம் வரைய பலர் Compass உபயோகிப்பார்கள். ஆனால் நான் அவளிடம் தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே அவளின் வளையலை வாங்கிக்கொள்வேன். அதைக்கொண்டுதான் தேர்வுக்கு தேவையான வட்டம், அரைவட்டம் எல்லாவற்றையும் வரைந்தேன். என்னமோ தெரியவில்லை, என் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் அவள் கலந்திருந்தாள் அப்போது. இன்று ஒவ்வொரு நினைவிலும் கலந்திருக்கிறாள்.

* தினேஷ்மாயா *

0 Comments: