வாழ்க மனிதநேயம்

Saturday, February 02, 2013



இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சில மணி நேரத்திற்கு முன்னர் இறந்துவிட்டார். காரணம் வேறொன்றுமில்லை, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையோ அல்லது முதலுதவியோ செய்ய மருத்துவர் எவரும் அங்கே இல்லை. தன் தாயை, பிறந்த சில மணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தைக்கு யார் , என்ன பதில் சொல்வார்கள். அவனுக்கு தாய்ப்பாசன் என்றால் என்ன என்பதை யார் காட்டுவார். சிலரின் அலட்சியத்தால் பலரின் உயிர் பிரிவதை தடுக்க எவனும் முன்வந்ததாய் தெரியவில்லை. ஏன் நானும்தான். இங்கே என்னால் கதறி எழுதத்தான் முடிகிறதே தவிர, எவரையும் தண்டிக்கவோ தட்டி கேட்கவோ முடியவில்லையே. வாழ்க ஜனநாயகம்... வாழ்க மனிதநேயம்..

- தினேஷ்மாயா -

0 Comments: