காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்

Saturday, December 22, 2012



நான நான னனனா நகநக
நான நான னனனா நகநக
நான நான நகனானா  நான நான நகனா
நான நான நகனானா  நான நானனா
நான நான னா நன்னான நான னா
நன்னான நான னா...

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்கச் சொன்னேன்
உன்னை தேடி பார்க்கச் சொன்னேன்
சுற்றும் பூமி நிற்கச் சொன்னேன்
உன்னை தேடி பார்க்கச் சொன்னேன்
என்னை பற்றி கேட்கச் சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க

ம்... ம்... ம்...     ம்... ம்... ம்...
ம்... ம்... ம்...     ம்... ம்... ம்...

நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும்
உன்னை எண்ணி வாழும் ஓர்
ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி...
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி...
சாத்தி வைத்த வீட்டில் தீபம்
ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம் 
ஹே ஹே ஹே ஹே

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க

நான்னான னானன்னான  நான்னான னானன்னா...
நான்னான னானன்னான  நான்னான னானன்னானன்
நான்னான னானன்னா  நான்னான னானன்னா
நான்னான னானன்னா...

நேற்று எந்தன் கனவில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே
பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்த என் நெஞ்சில்
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி...
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணம் ஓடும் தறிகெட்டு
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி...
என்னை இன்று மீட்கத் தான் உன்னை தேடி வந்தேனே
மீட்ட போதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்
ஹே ஹே ஹே ஹே

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்கச் சொன்னேன்
சுற்றும் பூமி நிற்கச் சொன்னேன்
உன்னை தேடி பார்க்கச் சொன்னேன்
என்னை பற்றி கேட்கச் சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்
பூப் பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி வைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க

திரைப்படம் : நீதானே என் பொன்வசந்தம்
வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்
இசை: இசைஞானி இளையராஜா

0 Comments: