முதல் முறை பார்த்த ஞாபகம்

Saturday, December 22, 2012



முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழைவரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழியா சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழைவரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்டநெடும் கனாவிநிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்ஜெமெனும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வழியா சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழைவரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழியா சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
வசந்தம் பொன்வசந்தம்

திரைப்படம்: நீதானே என் பொன்வசந்தம்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: சுனிதி சௌஹான்
இசை: இசைஞானி இளையராஜா

0 Comments: